2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சீருடைத் தொகைக்கான முதல் தொகையை சீன அரசாங்கம் நேற்று (13) கல்வி அமைச்சிடம் கையளித்துள்ளது.