Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்15 வயது பாடசாலை மாணவியை சீரழித்த 44 வயதுடைய நபர் கைது!

15 வயது பாடசாலை மாணவியை சீரழித்த 44 வயதுடைய நபர் கைது!

15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 44 வயது நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொம்பே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அறையை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் உணவகத்தின் முகாமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments