திஸ்ஸமஹாராம, கல்கனு சந்தி பிரதேசத்தில் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் உடனடியாக அந்த நபரை திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திஸ்ஸமஹராம மஹசேன்புர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 28 ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் நேற்று அதிகாலை அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நபரின் மரணம் சம்பந்தமாக திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைளை நடத்தி வருகின்றனர்.