நாடு மிக விரைவில் இரண்டாக பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாக்குறுதி மூலம் நாடு விரைவில் பிளவுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கின் பிரிவினைவாத மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியல் வாதிகளின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டாலும் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
முழு நாடும் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மூலோபாய ரீதியான தீர்வுத் திட்டங்கள் எதனையும் இதுவரையில் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட சர்வகட்சி கூட்டத்தை கூட்டுவதன் மூலம் இனவாத அரசியல் கட்சியொன்றை திருப்திபடுத்தும் நோக்கில் விமல் வீரவன்ச தென்னிலங்கை ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.