Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி ; வெளியான காரணம்!

ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி ; வெளியான காரணம்!

கண்டியில் இருந்து மத்தல நோக்கி பயணித்த ரயிலில் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி பிரதான பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்கு பின்னால் குறித்த மாணவி நேற்று புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பிட்டிய கல்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய குறித்த மாணவி நேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து சடலத்தை கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த பாடசாலை மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments