Friday, April 26, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ். பருத்தித்துறையில் இறைச்சிக்காக திருடப்பட்ட மூன்று பசு மாடுகள் மீட்பு!

யாழ். பருத்தித்துறையில் இறைச்சிக்காக திருடப்பட்ட மூன்று பசு மாடுகள் மீட்பு!

யாழ். பருத்தித்துறை வல்லிபுரகுறிச்சி பிரதேசத்தில் அறுவைக்காக திருடப்பட்ட 3 பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் (14.11.2022) பருத்தித்துறை பொலிஸாரினால் இந்த பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீட்கப்பட்ட குறித்த பசுக்களை பருத்தித்துறை நீதிமன்றத்தின் ஊடாக உரியவர்களிடம் ஒப்படைக்க பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாடுகளை திருடியவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments