Friday, April 26, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ் தேர்தல் களத்தில் குதித்த வாழைப்பழச் சீப்பு!

யாழ் தேர்தல் களத்தில் குதித்த வாழைப்பழச் சீப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தனித்து வாழை சீப்பு சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று சனிக்கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் யாழ்ப்பாணத்தில் இதுவரையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை வழங்க யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் தனித்து போட்டியிடுவோம்.

தேர்தலின் அடிப்படையான பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மாகாண சபை பாராளுமன்றமாக தேர்தலில் போட்டியிடுவோம் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments