Friday, April 26, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் யுவதி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் யுவதி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் பிடித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.

வீட்டுக் கிணற்றில் யுவதி குளித்துக் கொண்டிருந்த போது, இளைஞன் ஒருவர் மறைந்திருந்து தன்னை வீடியோ படம் பிடிப்பதை அவதானித்து, சத்தமிட்டுள்ளார்.

இளைஞன் தப்பியோட முயன்ற போதும், அயலவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

வீதியில் சென்று கொண்டிருந்த போது, குளிக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்ததாகவும், யுவதி அழகாக இருந்ததால் படம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 100,000 ரூபா சரீரப் பிணை வழங்க உத்தரவிட்டார், ஆனால் அன்றைய தினம் இளைஞனுக்காக யாரும் முன்வராததால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments