யாழ்ப்பாணம் கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் 51ஆவது படைப் பிரிவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 35 வயதுடைய இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.