கணவன்-மனைவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்த சுமார் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மந்துவில் மேற்கு பனங்காட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சமையலறை புகைபோக்கி வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகளை திருடி, வீட்டின் கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.