இலங்கை நாணயத்திற்கு டொலர்களை மாற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றிய குழுவொன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் திருகோணமலை, தலவாக்கலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் வாகன உதிரிபாகங்களை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகக் கூறி, குறிப்பிட்ட இடத்திற்கு பணத்தைக் கொண்டு வருமாறு கூறி, குறித்த நபர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரிடமிருந்து 25 இலட்சத்து 18 இலட்சம் ரூபா பணம் இவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. அத்துடன், காலியைச் சேர்ந்த ஒருவரிடமும் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தையும் இந்தக் கும்பல் கொள்ளையடித்துள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து 825 அமெரிக்க டொலர்களும் 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.