யாழில் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். இன்று (02.10.2022) இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீதரன், பொத்துவில் முதல் பொலிகண்டி, பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமி, சிவில் சமூக தலைவர்கள் மற்றும் பொது அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அரச இயந்திரத்தினால் பொதுமக்களின் காணிகளை அபகரித்து தமது செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும், எமது தாய்நாட்டின் ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இராணுவத்தினர் வெளியேறி விடுங்கள் என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.