Friday, April 26, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் இரவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்க்கு நேர்ந்த கதி !

யாழில் இரவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்க்கு நேர்ந்த கதி !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (19)ப்இரவு 10:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இரவு 10:30 மணியளவில் தனது தோட்டத்திற்கு காவலுக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்

வீட்டில் இருந்து புறப்பட்டவர் அம்பன் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக மதகுடன் மோதி படுகாயமடைந்து பாலம் ஒன்றினுள் வீசப்பட்டுள்ளார்.

இரவு வேளை என்பதால் யாரும் கண்டுகொள்ளமல் அதிக நேரம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்செயலாக வருகைதந்த இளைஞர் ஒருவர் 1990 நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments