Friday, April 26, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் இடம்பெற்ற திருட்டச்சம்பவம் : பொலிஸாரை அதிர வைத்த சம்பவம்!

யாழில் இடம்பெற்ற திருட்டச்சம்பவம் : பொலிஸாரை அதிர வைத்த சம்பவம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள தொலைபேசி கடையில் இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (20-11-2022) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, ​​அவரை 2022.12.05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments