மோடியின் அழைப்பை சம்பந்தன் புறக்கணித்ததாகவும், அதற்கான காரணத்தையும் சம்பந்தன் வெளிப்படுத்தவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.