Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்முதலை இழுத்துச்சென்ற நபரின் கை மற்றும் கால்கள் எச்சங்களாக மீட்பு!

முதலை இழுத்துச்சென்ற நபரின் கை மற்றும் கால்கள் எச்சங்களாக மீட்பு!

மாத்தறை, பீக்வெல்ல, நில்வலா ஆற்றுக்கு அருகில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பல உடல் உறுப்புகளும் அதன் அருகில் காணப்பட்டன.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments