நாட்டில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அது உறுதிபடத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மின்சார கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை மின்சார சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
இவ்வாறு அதிகரித்தாலும் மின்சார சபை நட்டத்தில் தான் இயங்கி வருகின்றது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் காங்களில் மின் கட்டணம் மேலும் 25 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் மின் கட்டணத்தை அதிகரித்த பின்னரும் மின்சார சபை 25 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.