மாணவர்களை மின்சாரம் தாக்கி தண்டனை வழங்கிய அதிபர் மற்றும் அதற்க உடந்தையாக இருந்த ஆசிரியர் மற்றும் 3 பொலிஸார் பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணை – மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக சந்தேகித்து 5 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
பாணந்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.