Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்மாணவர்கனை மின்சாரம் தாக்கி தண்டனை வழங்கிய அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மாணவர்கனை மின்சாரம் தாக்கி தண்டனை வழங்கிய அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மாணவர்களை மின்சாரம் தாக்கி தண்டனை வழங்கிய அதிபர் மற்றும் அதற்க உடந்தையாக இருந்த ஆசிரியர் மற்றும் 3 பொலிஸார் பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹொரணை – மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக சந்தேகித்து 5 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

பாணந்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments