மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செங்கலடி – பதுளை பிரதான வீதியின் பங்களாவடி, புலியடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயதுடைய சதுர்ஷன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.