ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றிரவு (11) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தேவபுரம் சித்தாண்டி முறக்கொட்டான்சேன் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி 1, அலைமாமாள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.