அரசாங்கம் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமன்றி மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், கஞ்சா ஏற்றுமதி தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், மக்களை போதையில் ஆழ்த்தி போராட்டம் நடைபெறுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக அதனை உட்கொண்டு இறக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் செயல் இது என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.