திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சி அருகே உள்ள பெத்தகோன் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஹரி என்ற 8 வயதில் மகன் உள்ளார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால், ஜெயபாரதி, பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தாயும், மகனும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் வீரானந்தம், வீட்டு செலவுக்கு ஜெயபாரதிக்கு பணம் அனுப்பவில்லை என தெரிகிறது.
விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதிய தீக்குளித்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், “எங்கள் முடிவுக்கு யாரும் பொறுப்பல்ல.எனது குடும்ப சூழ்நிலை.எனது உடல்நிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவைத் தேடினேன்.
என் உடலை என் தந்தையிடமோ அல்லது கணவனிடமோ ஒப்படைக்க வேண்டாம். இறந்த பிறகும் நான் யாரையும் செலவு செய்ய விரும்பவில்லை. என் கணவர் 8 ஆண்டுகளாக எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.
அவர் என் மகனுக்கு தகப்பனாகவோ, எனக்கு கணவனாகவோ இருந்ததில்லை. நீ போய் உன் தந்தையுடன் இரு என்று என் மகனிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்காமல் எனக்கு விஷம் கொடுத்தார். இந்த வீட்டிலிருந்து ஒரு குண்டூசி கூட என் கணவருக்கும், என் தந்தை வீட்டிற்கும் செல்லக்கூடாது என்று எழுதி இருந்தார். தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.