Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்போலி நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய சிப்பாய்கள்!

போலி நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய சிப்பாய்கள்!

திடலவை நகரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் இராணுவ வீரர்கள் மூவர் 5000 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து மதுபானம் வாங்கச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி போலி நாணயத்தாள் அச்சிட்ட இராணுவ சிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சி பள்ளி அலுவலகத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர், அங்குள்ள கணினி மற்றும் பிரிண்டரை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது விசாரணையில் தெரியவந்தது.

குறித்த இராணுவ வீரரை கைது செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இரண்டு போலி நாணயத்தாள்கள் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போலி நோட்டு அச்சடித்த ராணுவ வீரர் மற்றும் மதுபானம் வாங்கச் சென்ற ராணுவ வீரர்கள் மூவரும் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments