Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது !

போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது !

போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் வாழைச்சேனை பிறைந்துராச்சேனையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 01 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் மற்றும் சுமார் 08 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 25000 ரூபா எனவும் ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 400000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் கைது செய்யப்பட்ட பெண்ணும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments