மாத்தறை பிரதேசத்தில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸை பாடசாலை மாணவர் ஒருவர் ஓட்டிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை அந்த மாணவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த மாணவன் பேருந்தை ஓட்டும் வீடியோ நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.