Saturday, April 27, 2024
Homeஇந்திய செய்திகள்பூப்பறிப்பதாக கூறிச்சென்ற பெண்ணுக்கு நடந்த சோகம் : கதறும் குடும்பத்தினர்!

பூப்பறிப்பதாக கூறிச்சென்ற பெண்ணுக்கு நடந்த சோகம் : கதறும் குடும்பத்தினர்!

லாரன்ஸ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ஹெல்வினா சைனி. (வயது 18). இந்நிலையில் நேற்றுமுன்தினம் சைனி சொந்த தோட்டத்தில் பூ பறிக்க சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை உட்பட உறவினர்கள் அனைவரும் சைனியை தேடினர். இளம்பெண்ணின் துப்பட்டாவும் செருப்பும் அவர்களது குடிசைக்கு அருகில் உள்ள கிணற்றின் அருகே கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இளம்பெண் வழுக்கி விழுந்ததாக நினைத்து கதறி அழுதனர்.

பின்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் நீண்ட நேரம் தேடினர். பின்னர் நேற்று தொடர்ந்து தேடியபோது கிணறு சுமார் 90 அடி ஆழம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மணப்பாறையில் இருந்து ஆழ்துளை கேமரா கொண்டு வரப்பட்டு கிணற்றில் விடப்பட்டது. இதையடுத்து, 32 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிறுமி விழுந்தாரா? அல்லது தற்கொலையா? அல்லது கொலையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments