சேலைக்கடைக்குள் புகுந்த கும்பல் தம்பதி மீது வாள்வெட்டுத் தாக்குதலில் கணவர் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இன்று காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 29 வயதான கணவன் உயிரிழந்துள்ள நிலையில், பலத்த காயமடைந்த பெண் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.