Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்பிரபல பாடசாலை சீருடையில் பியர் அருந்திய மாணவர்கள்!

பிரபல பாடசாலை சீருடையில் பியர் அருந்திய மாணவர்கள்!

பாணந்துறை கடற்கரையில் இன்று (22) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாடசாலை சீருடையில் பீர் அருந்திக்கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருவத் தேர்வு முடிந்ததும் பீர் கேன்களை வாங்கிக் கொண்டு கடற்கரையில் அமர்ந்து பீர் குடித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரிடம் பிடிபடும் மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments