குடிபோதையில் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (11.11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில்லிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பேருந்தை மாலை 6 மணியளவில் புளியங்குளம் பகுதியில் நிறுத்தி சாரதியை சோதனையிட்டனர்.
ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்து, அவரை கைது செய்தனர். பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.