Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் 20 வயது இளைஞரை காணவில்லை ; பொலிஸார் வலை வீசி தேடல்!

நுவரெலியாவில் 20 வயது இளைஞரை காணவில்லை ; பொலிஸார் வலை வீசி தேடல்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

காணாமல் போனவர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த இளைஞர் கடந்த 03 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

20 வயதுடைய குறித்த இளைஞர் வீட்டில் இருந்து நுவரெலியா பிரதான நகருக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த இளைஞரின் பெற்றோர் கடந்த 6 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கண்டவர்கள் 0763497788 (ஆனந்தராஜ்) என்ற பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments