Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்நீர் நிறைந்த குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

நீர் நிறைந்த குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

01 வயது 02 மாத ஆண் குழந்தை ஒன்று நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகண்டிய பிரதேசத்தில் நேற்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அருகில் உள்ள கழிவறைக்காக வெட்டப்பட்ட தண்ணீர் நிரம்பிய குழியில் குழந்தை விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குழியில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments