முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அக்கட்சியில் உயர் பதவி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு குழுக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.