தமிழகம் கும்பகோணம் அருகே தாய், தந்தையை கொன்று உடலை சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தைலையம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தாய், தந்தை இருவரையும் கொன்ற மகன் அவர்களது உடலை வீட்டில் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்வழியாகச் சென்றவர்களுக்கு துர்நாற்றம் வீசியதையடுத்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ராஜேந்திரன் வீட்டுக்குள் இருந்தார்.
மேலும் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பெற்றோரை கொன்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனை கைது செய்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.