Saturday, April 27, 2024
Homeவிளையாட்டுதனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு கிரிக்கெட் வீரர்!

தனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை தொடர்ந்து தசுன் சானகா மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில், அங்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற தசுன் சானக, காணி வர்த்தக நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கு கிரிக்கெட் விளையாடச் சென்றவர் நில வியாபாரத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக் தொடர்பில் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments