தனுஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் தனது கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடிப்பதற்கு முன்பே, அவர் இரண்டாவதாக இயக்கவிருக்கும் படம் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.
விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில், தற்போது காளிதாஸ் ஜெயராமும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. “இந்த மார்ச் மாதத்திற்குள் கேப்டன் மில்லரை முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
அவர் இரண்டாவதாக இயக்கவிருக்கும் படம் மே முதல் வாரத்தில் தொடங்கும். படத்திற்கான இறுதி ஸ்கிரிப்ட்டை அவர் இன்னும் முடிக்கவில்லை. நடிகர்கள் மற்றும் குழுவினர் இறுதி செய்யப்பட்டாலும், நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து இன்னும் தெளிவான ஐடியா வழங்கப்படவில்லை” என்று படத்திற்கு நெருக்கமான வட்டாரம் பிரபல ஆங்கில ஊடகத்திடம் பகிர்ந்துக் கொண்டது.
இப்படம் வட சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தனுஷ் தனது ப பாண்டியை போலவே இதிலும் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத்தோற்றத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.