சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருத்தமில்லாதவர்களை நீக்கினால், பொருத்தமானவர்களுக்கு வழங்கலாம் என்றார்.
அந்த பட்டியலில் சுமார் 20 வருடங்களாக சிலர் இருப்பதாகவும், முதலில் யார் யார் சரி, புதியவர்களை எப்படி சேர்ப்பது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் சிலர் இதை அரசியல் நடவடிக்கையாக பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.