மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஸ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா பிரபாகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.