கண்டியில் வயல்வெளியில் சேறும் சகதியுமான பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் சேறும் சகதியுமாக இருந்த வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.