இன்று (28) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட 5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானம் 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரெஞ்சு தயாரிப்பான Airbus-321 Neo விமானமாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 02.02 மணிக்கு மதுரை நோக்கிப் புறப்பட்ட விமானம் 05 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் 02.07 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மேலும், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டு, விமானம் சரி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விமானம் இந்தியாவின் மதுரைக்கு புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.