வவுனியாவில் மழைநீர் சேகரிப்பு தொடட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது செட்டிக்குளம் – பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 9 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து, தாயும், அப்பகுதி மக்களும் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.