சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பொருட்களைக் கைப்பற்றியதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.எஸ்.வீரசிறி குறிப்புட்டுள்ளார்.