Friday, April 26, 2024
Homeஇந்திய செய்திகள்சிக்கலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா?மாணவர்களுக்கு ஆளுநர் ரவி கூரிய அறிவுரை.

சிக்கலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா?மாணவர்களுக்கு ஆளுநர் ரவி கூரிய அறிவுரை.

இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 மாணவர்களுக்கான “எண்ணித் துணிக” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஐஏஎஸ் பணிக்காக இறுதியாக நடைபெறும் நேர்முக தேர்வு என்பது உங்களின் மனத்திடத்தை சோதிக்கும் தேர்வு என்று கூறிய ஆளுநர், “நீங்கள் திடமாகவும் எனர்ஜியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள்.

சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். பெண் அதிகாரிகள் புடவை கட்டத் தெரியவில்லை என்றால் புடவை கட்ட கற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் கோட் சூட் அணிந்து கொள்ளுங்கள்” என்றார்.

கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம், நிதானமாக பதில் அளியுங்கள் என்றும், செய்தி தாள்களில் வரும் செய்திகள் ஒருவரின் பார்வையாக இருக்கும் எனவே அதை நீங்கள் தேர்வு செய்ய கூடாது. நீங்கள் ஒரு சமூக ஆர்வலர்கள் கிடையாது, மக்களுக்காக பணியாற்ற கூடியவர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் நீங்கள் தான் நீங்கள் மற்றவர்கள் அல்ல, நீங்கள் மற்றவர்கள் கருத்தை கேட்கலாம். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும். பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டாம். அதை சங்கடமாகவும் கருத வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments