Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள்! '9 ஏ' சித்திகளை பெற்று இரட்டை சகோதரிகள் சாதனை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள்! ‘9 ஏ’ சித்திகளை பெற்று இரட்டை சகோதரிகள் சாதனை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ கிரேடு பெற்ற இரட்டை சகோதரிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

காலி மாபலகம மாவட்டத்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகளான தினுமி நிம்சரா மற்றும் ரஸாரி ரன்சராய் ஆகியோர் காலி சிறி சுனந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்கள்.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இதற்காக 231,982 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி உயர்தரப் பிரிவிற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியடைந்துள்ளதுடன் 6566 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments