தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பழைய ஹெவ்லொக் வீதியில் மாயா அவென்யூ ரவுண்டானாவில் இருந்து பாமன்கடை சந்தி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனத்தை பஸ் சாரதி முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என அறியப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.