திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியை சேர்ந்த சிவரூபன் கேம்சலா வயது – 26 என்ற இளம் குடும்பப் பெண் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் கணவர் கத்தாரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பெண் டெங்குவால் உயிரிழந்தார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலை வீதியில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், யுவதி டெங்கின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.