கிளிநொச்சியில் காய்ச்சல் காரணமாக 08 மாத குழந்தை பலியாகயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது கிளிநொச்சி – கணேசபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேசபுரத்தைச் சேர்ந்த குழந்தையொன்று கடந்த 7 நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
இதேவேளை, யாழ் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.