Saturday, April 27, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் இறச்சிக்காக பசுவை கொன்று வயிற்றில் இருந்த கன்றுகுட்டியை எடுத்து வீசிய...

கிளிநொச்சியில் இறச்சிக்காக பசுவை கொன்று வயிற்றில் இருந்த கன்றுகுட்டியை எடுத்து வீசிய நால்வர்!

கிளிநொச்சியில் இறச்சிக்காக பசுவை கொன்று பசுவின் வயிற்றில் இருந்த கன்றுகுட்டியை நால்வர் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கன்று ஈனும் நிலையில் இருந்த பசுவைக் கொன்று, அதன் வயிற்றைக் கிழித்து, கன்றுக்குட்டியை தூக்கி எறிந்துவிட்டு, மிகுதியை இறைச்சியாக்கிய சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராமநாதபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரையும் கால் நடையின் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments