களப்பணிக்கு காவல்துறையினர் முக்கியத்துவம் தர வேண்டும் என சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதில் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிற காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.