கனடாவின் ஒன்டாரியோவில் ஆயிரம் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.
கணிதம், எழுதுதல் மற்றும் வாசிப்பு திறன்களை வளர்க்கும் நோக்கில் இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்களை கவரும் வகையில் அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகளின் அடிப்படை திறன்களை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியறிவு, வாசிப்பு மற்றும் கணித திறன்களை மேம்படுத்த விரும்புகிறார்கள்.
பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளைப் பெறவும் தேவையான அடிப்படையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.