Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 38 இலங்கையர்கள்; விடுவிக்கும்படி கோரிக்கை!

கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 38 இலங்கையர்கள்; விடுவிக்கும்படி கோரிக்கை!

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், இந்திய தேசிய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குப் பின்னர் கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் தாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர்கள், மனித கடத்தல் முகவர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments